
பேரா மாநில தேசிய முன்னணி தலைமைத்துவதுடன்,மாநில ஐபிஎப் கொண்டிருக்கும் ஐக்கியமான உறவும்,நெருக்கமான தொடர்பும் தொடந்து நிலைத்திருக்கும்.அதற்கு அனைத்து வகையிலும் கட்சி தேசிய முன்னணிக்கு விசுவாசமாக இருந்து செயல்படுவோம் என்று பேரா மாநில ஐபிஎப் தலைவர் வி.மாணிக்கம் தெரிவித்தார்.
தற்போது மாநில தேசிய முன்னணி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதால்,அனைத்து தரப்பினரிடமிருந்தும் பேராதரவும்,தேவையான உதவிகளும் கிடைத்து வருவதாக சொன்னார்.
டான்ஸ்ரீ எம்.ஜி பண்டிதனின் பாசறையிலும்,தற்போதைய தேசிய தலைவர் டத்தோ லோகநாதன் தலைமையிலும்,எங்களின் வற்றாத ஆதரவு தேசிய முன்னணிக்கு இருக்குமென புக்கிட் கந்தாங் தொகுதி ஐபிஎப் தலைவருமான வி.மாணிக்கம் உறுதியளித்தார்.
