
இம்மாத இறுதிக்குள் 50 விழுக்காடு மக்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் போடப்படும் என்று அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
இம்மாத இறுதிக்குள் நாட்டிலுள்ள 18 வயதுக்கும் மேற்பட்ட 50 விழுக்காட்டு மக்கள் இரண்டு தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருப்பர் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இது வரை நாட்டில் 29 விழுக்காட்டுப் பெரியவர்கள் இரண்டு தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்..
தற்போது தடுப்பூசியைச் செலுத்தும் பணிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதால் இம்மாதம் இறுதிற்குள் 50 விழுக்காடு மக்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் போடப்படும் என்றார் அவர்.
