
நாடாளுமன்றத்தை நோக்கி எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று ஊர்வலமாக சென்றபோது கலகத் தடுப்பு போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கெஅடிலான், ஜசெக,அமானா, பெர்ஜூவாங்,மூடா, உப்கோ மற்றும் வாரிசான் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் இதில் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டுமென முழக்கமிட்டனர்
பேனர் ஒன்றை ஏந்தியபடி ஊர்வலம் ஊர்வலமாக வந்த அவர்கள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் உடனடியாக பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
