
சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் ஹசான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக பாஸ் கட்சியின் தகவல் பிரிவு அதிகாரி முகமட் ஷாஸிர் தெரிவித்தார்.
இருதயத்தில் மூன்று அடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இவர் நாளை மருத்துவமனையிலிருந்து வெளியேறுவார் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே
அவசரகால உத்தரவு ரத்து செய்யப்பட்டது தொடர்பில் மாட்சிமை தங்கிய மாமன்னரின் அனுமதியைப் பெறவில்லை என்று இஸ்தான நெகாரா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதால் இவருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் அம்னோவைச் சேர்ந்த சில தலைவர்களும் கடுமையான தாக்குதலை கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
