
அவசரகால உத்தரவு ரத்து செய்யப்பட்டது தொடர்பில் மாட்சிமை தங்கிய மாமன்னரின் அனுமதியைப் பெறவில்லை என்று இஸ்தான நெகாரா அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து அன்று பிரதமர் இல்லத்தை நோக்கி அமைச்சர்களும் பலரும் படையெடுத்தனர்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இல்லத்தில் பலர் கூடியபோது நோய்த்தொற்று பரவாயில்லையா என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாமி பாட்சில் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற கூட்டம் நடத்தினால் மீண்டும் நோய்த் தொற்று பரவும் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறுகிறார்.
பிரதமர் வீட்டில் அதிகமானோர் கூடிய ங நோய்த்தொற்று பரவும் என்று அவர் ஏன் அப்போது ஆலோசனை கூறவில்லை என்று பாமி பாட்சில் கேள்வி எழுப்பினார்.
