
நாடு நோய் தொற்றினால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் பலகோடி வெள்ளியில் கெடா கூலிம் விமான நிலையம் கட்டுமானத் திட்டம் கையெழுத்திடுவது சரியான தருணம் அல்ல என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி சுட்டிக்காட்டினார்.
வரும் 2026ஆம் ஆண்டில் பலகோடி வெள்ளியில் இந்த விமான நிலையத்தை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விமான நிலைய குத்தகை விபரங்களை கெடா மாநில அரசு வெளியிடவேண்டும்.
அந்த விமான நிலையம் கட்டபடக்கூடாது என்பதல்ல. இந்த நோய் தொற்றினால் மக்கள் வேலையிலிருந்து உணவுக்கு சிரமப்படும் நேரத்தில் இப்படி ஒரு மெகா திட்டம் தேவையா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
