
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை உறுதி செய்யவும் சந்தேகங்களுக்கு முடிவு கட்டவும் மாமன்னர் மற்றும் மலாய் ஆட்சியாளர்களால் முடியும் என்று வாரிசான் கட்சி தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு மாமன்னர் மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் உத்தரவிட முடியும் என்றார் அவர்.
இதன்வழி அவருக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்ற அனைத்து சந்தேகங்களுக்கு முடிவு காணப்படும் என்று அவர் கூறினார்.
இப்போது இந்த ஒரு வழி மட்டுமே இருக்கிறது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறவில்லை. பிரதமருக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதும் தெரியவில்லை என்று அவர் கூறினார்.



