
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினை அவரது இல்லத்தில் சந்தித்த பின்னர் நள்ளிரவு 12. 30 மணிக்கு துணை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் உடனடியாக ஸ்ரீ பசிபிக் ஹோட்டலுக்கு வரைந்தார்.
அங்கே அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் 20 அம்னோ எம்பிக்களை சந்தித்தார்.
இதனிடையே நாட்டில் அரசியல் நிலவரம் மிக மோசமாக இருக்கும் வேலையில் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்த அமைச்சர்கள் வெளியே வந்தபோது நிருபர்களிடம் கருத்துரைக்க மறுத்துவிட்டனர்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு திரட்டும் பணியில் ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ சஹிடான் காசிம் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
புத்ரா உலக வாணிப மையத்தின் அருகில் உள்ள ஸ்ரீ பசிபிக் ஹோட்டலில் அவர் ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
