
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை 11 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டதை தொடர்ந்து பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தது.
அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி, டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்,தெங்கு ரசாலி ஹம்சா, அஸாலினா ஓஸ்மான் உட்பட 11 எம்பிக்கள் ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்று மாமன்னரிடம் சத்திய பிரமாணத்தை வழங்கி உள்ளனர்
அரசியல் நிலவரம் மிகவும் மோசமடைந்துள்ளதை தொடர்ந்து தற்போது துணை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், நிதியமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு சப்ருல், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின், அஸ்மின் அலி ஆகியோர் பிரதமர் இல்லத்தை நோக்கி படை எடுத்துள்ளனர்.
சட்டத்துறை தலைவர் இட்ருஸ் ஹருண் மற்றும் மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆகியோரும் பிரதமர் இல்லத்தை நோக்கி சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
