
அம்னோவுடன் சேர்ந்து நீந்திக் கரை சேரப்போகிறீர்களா அல்லது முழ்கப் போகிறீர்களா என்பதை மசீச மற்றும் மஇகா கட்சிகள் முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ காலிட் நோர்டின் தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன.
அவர்களுடன் சேர்ந்து மூழ்குவது அல்லது எங்களுடன் நீந்தி கரை சேர்வதா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துள்ளது.
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் மூழ்கும் நிலையில் இருக்கும் வேலையில் மஇகா மற்றும் மசீச எம்பிக்கள் எங்கே போவார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
