
டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணிக்கு முழுமையான ஆதரவு வழங்குகிறோம் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன் மற்றும் இளைஞர் பிரிவு தலைவர் கணேஷ் குமார் சம்பந்தன் இன்று தெரிவித்தனர்.
30 ஆண்டுகளாக தேசிய முன்னணிக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்கி வருகிறோம்.
இந்த இக்கட்டான நேரத்திலும் நாங்கள் எப்போதும் தேசிய முன்னணி பக்கம் இருப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
தேசிய முன்னணி எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் நாங்கள் கட்டுப்படுவோம் நேற்று அவர்கள் குறிப்பிட்டனர்
