
மலேசியாவின் இளம் சட்டமன்ற உறுப்பினர் களில் ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கும் பிணங்கு மாநிலத்தைச் சேர்ந்த பாகன் ஞாலம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஆதரவற்ற இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு புத்தாடைகளை வாங்கி கொடுத்து உதவி புரிந்துள்ளார். இன்னும் சில தினங்களில் நோன்புப் பெருநாளை கொண்டாட இருக்கும் இந்த குழந்தைகள் புத்தாடைகளை அணிந்து மகிழ்ச்சியில் திளைத்திருக்க சதீஸ் முனியாண்டி மனிதநேயத்துடன் உதவி புரிந்துள்ளார். தனது தொகுதியை சேர்ந்த ஏழை மக்களுக்கும் ஆதரவற்ற இல்ல குழந்தைகளுக்கும் இவர் பெருமளவில் உதவி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
