
பகாங் சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ் தனது தொகுதி மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறார்.
தற்போது நோய்தொற்று தாக்கம் அதிகமாக இருப்பதால் தனது தொகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு கிருமி நாசினி யை தெளிக்கும் பணியை அவர் மேற்கொண்டு வருகிறார்.
பேந்தோங் ஜனநாயக செயல் கட்சியின் உதவியோடு காராக் கம்போங் பாரு மற்றும் தாமான் ஹிஜாவ் குடியிருப்பு பகுதிகளில் இவரின் முயற்சியால் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
