
முகமூடி அணிந்த அடையாளம் தெரிய தெரியாத கும்பலால் தாக்கப்பட்ட பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ எம். ராமச்சந்திரன் தற்போது தேறி வருகிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் இப்போது இவர் வீடு திரும்பி இருக்கிறார்.
இவரை நேற்று நேரில் சந்தித்து பேசியதாக குறிப்பிட்ட பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி, பூரண குணமடைந்து டத்தோ ராமச்சந்திரன் விரைவில் பணிக்கு திரும்புவார் என்று தெரிவித்தார்.
