
பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசினை ஆதரிக்க லஞ்சம் தர முன்வரும் தரப்பினரை மலேசிய ஊழல் தடுப்பூ ஆணையம் விசாரிக்க வே வேண்டும் என்று பக்கத்தான் ஹராப்பான் தலைவர்கள் வலியுறுத்தினர்.
இத்தகைய செயல்களுக்கு எதிராக ஊழல் தடுப்பூ ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பெரும்பான்மை ஆதரவை இழந்து விட்டார் என்பதோடு கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 43(4) பிரிவுக்கேற்ப பதவி விலக அவர் மறுத்து வருகிறார்.
இப்போது
எதிர்க்கட்சி எம்பிக்களை இழுக்க விலை பேசப்படுகிறது என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கூட்டாக இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
