
ஆகஸ்ட் 2ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு வெளியே பேரணியில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி எம்.பி.களிடம், விளக்க அறிக்கைகளைப் பதிவு செய்யும் நடவடிக்கையை நிறுத்துமாறு பாயான் பாரு கெஅடிலான் எம்பி சிம் திஸி ஸின் காவல்துறையக் கேட்டுகொண்டார்.
ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல், டாங் வாங்கி மாவட்டக் காவல் நிலையத்தில் சாட்சியம் அளிக்க 30க்கும் மேற்பட்ட எம்.பி.க்களைப் போலீசார் அழைத்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.
இதுவரை சுமார் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இது வரலாற்றில் மிக அதிக எண்ணிக்கையாகும். மலேசிய வரலாற்றில், ஒரு பேரணி தொடர்பான விசாரணைக்கு உதவ அழைக்கப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை இதுபோல் அதிகமாக இதுவரை இருந்ததில்லை என்று அவர் கூறினார்.
