
தன்னலம் கருதாமல் வசதி குறைந்த மக்களுக்கு உதவி புரிந்து வரும் ஜெயம் நம்நாடு இயக்கம் தற்போது பல இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உணவு கூடைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.
ஜெயம் நம்நாடு இயக்கத்தின் தலைவர் டாக்டர் குமரேந்திரன் பாலகிருஷ்ணன் தலைமையில் அதன் பொறுப்பாளர்கள் வசதி குறைந்த மக்களை நாடிச் சென்று உதவி கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் பாங்கி தாமான் பெர்மாய் வட்டாரத்தைச் சேர்ந்த 15 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கியுள்ளது.
இதுவரை பாங்கி வட்டாரத்தில் 25 குடும்பங்களுக்கு ஜெயம் நம்நாடு உதவிகளை வழங்கி இருப்பதாக அதன் பொறுப்பாளர்களில் ஒருவரான திருமதி தமிழ்ச்செல்வி செல்வராஜு தெரிவித்தார்.
