
ஆகஸ்ட் 2ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி செல்லும் பேரணியில் பங்கேற்றது தொடர்பில் இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அந்த வகையில் இன்று பினாங்கு மாநில முதல்வரும் தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் கூன் இயோ மற்றும் ஜெலுத்தோங் எம் பி நேதாஜி ராயர் ஆகியோரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை கெடா கூலிம் போலீஸ் நிலையத்துக்கு வரும்படி தமக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கருப்பையா ஏஎஸ்டி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
