
நோய்த்தொற்று பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் வேலையில் மாணவர்கள் இணையம் வழி கல்வி பயின்று வருகிறார்கள்.
இதில் வசதி குறைந்த மாணவர்கள் மணிக் கணினிகள் இல்லாததால் பெரும் பிரச்சினையை எதிர் நோக்கியுள்ளன.
ஜொகூர் பெக்கோ சட்டமன்ற தொகுதியில் வசதி குறைந்த மாணவர்கள் எதிர் நோக்கி இருக்கும் இந்த பிரச்சனைக்கு உதவும் வகையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன் 60 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கி உதவி புரிந்துள்ளார்.
எல்லா இனங்களையும் சார்ந்த வசதி குறைந்த மாணவர்களுக்கு இந்த மணிக்கணினிகள் மூலம் வீட்டிலேயே பாடங்களை இணையம்வழி படிக்க முடியும் என்று டாக்டர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதனிடையே தக்க நேரத்தில் எங்களுக்கு மணிக்கணினிகளை வழங்கி உதவி புரிந்த டாக்டர் ராமகிருஷ்ணனுக்கு மாணவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
