
இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சி தலைவர்களுடன் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் முக்கிய சந்திப்பை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று மாலை ஐந்து மணிக்குப் பிறகு இந்த சந்திப்பு கூட்டம் புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மை குறித்து கேள்வி எழுந்துள்ளதால் இந்த முக்கிய சந்திப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
