
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்து விட்டார் என்று பிரதமருக்கு எந்த ஒரு கடிதத்தையும் தாம் அனுப்பவில்லை என்று சபாநாயகர் டத்தோ அஸாஹர் இன்று அறிவித்தார்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு நான் எந்த ஒரு கடிதத்தையும் அனுப்பவில்லை.
இப்படி ஒரு கடிதத்தை அனுப்பியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றார் அவர்.
பெரும்பான்மை இல்லை என்பதால் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமென்று பிரதமருக்கு சபாநாயகர் கடிதம் எழுதியதாக சுவரா தொலைக்காட்சி நிறுவனம் செய்தியை வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த சுவாரா தொலைக்காட்சியில் வெளிவந்த செய்தியும் சின்னமும் போலியானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
