
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ மக்கள் சேவை மையத்தின் ஏற்பாட்டில் உடல் பேரு குறைந்தவர்களுக்கு வீட்டிலேயே தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
உடல் பேரு குறைந்தவர்கள், நடத்தும் சக்தியை இழந்து படுக்கையிலேயே இருப்பவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இல்லம் தேடி தடுப்பூசி போடும்படி தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக சார்லஸ் சந்தியாகோ தெரிவித்தார்.
மலேசியா புற்றுநோய் கழகத்தின் ஆதரவோடு இந்த தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்தவர் உட்பட நடக்கும் சக்தி இழந்த முதியோர்களும் தடுப்பூசியை பெறுவார்கள் என்றார் அவர்.
கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பேரு குறைந்தவர்கள் தடுப்பூசியை பெறுவதற்கு 016- 62 67797 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
