
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கம் சட்டப்பூர்வமானதா என்ற விவகாரத்திற்கு விரைந்து ஒரு முடிவு காணப்படலாம் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சுட்டிக்காட்டினார்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் எடுக்கும் முடிவு உட்பட எந்த ஒரு முடிவும் நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்வதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
ஆகவே அடுத்து வரும் 48 மணி நேரம் நெருக்கடியாக இருக்கும் என்று பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.



