
எதிர்க்கட்சி எம்பிக்கள் உட்பட பல எம்பிக்களுக்கு சலுகைகளை வழங்க பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் முன்வந்திருப்பது பெரும்பான்மையை இழந்து விட்டார் என்பதை தெளிவாக காட்டுகிறது என்று அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் குறிப்பிட்டார்.
அவர் பதவி விலக மறுப்பது சட்டத்துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.
ஆகவே டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
