
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரியின் சிறப்பு அதிகாரியாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய சமூகம் உட்பட சமுதாயம் சார்ந்த விவகாரங்களுக்கு தீர்வு காணும் வகையில் சிலாங்கூர் மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரியாக டாக்டர் குணராஜ் நியமிக்கப் பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கெஅடிலான் கட்சி தோற்றுவிக்கப்பட்டது முதல் இதுநாள் வரை இவர் கட்சிக்காக மற்றும் சமுதாயத்திற்காக ஆற்றியிருக்கும் சேவைக்கு அங்கீகாரமாக இந்த நியமனம் அமைந்திருக்கிறது.
