

பினாங்கு சிட்டி அரங்கில் நடைபெற்ற மலேசிய சூப்பர் லீக் கால்பந்து ஆட்டத்தில் பிஜே அணியிடம் பெற்ற வெற்றி அவ்வளவு சுலபமாக கிடைத்தது அல்ல என பினாங்கு எப்சி தலைமை பயிற்றுனர் தோமஸ் டிருச்சா கூறினார்.
இந்த ஆட்டத்தில் தாம் பல்வேறு யுக்திகளை கையாண்டதால்,இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் பிஜே சிட்டி எப்சியை 2 -1 என்ற கோல்கணக்கில் பினாங்கு எப்சி அணி வெற்றி வாகை சூட முடிந்ததாக தெரிவித்தார்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் கொஞ்சம் பதற்றமாக இருந்தாலும் தமது ஆட்டக்காரர்கள் முழு திறனையும் வெளிப்படுத்தி மூன்று புள்ளிகளைப் பெற கடுமையாக போராடினர் என செக்குடியரசை சேர்ந்த பயிற்றுநரான அவர் சொன்னார்.க்ஷவெற்றியின் மூலம் 37 புள்ளிகளுடன் குழுப்பட்டியலில் பினாங்கு எப்சி நான்காவது இடத்தில உள்ளது.
