
உலோக,மறுசுழற்சி கடைகளை திறக்குமாறு அரசாங்கத்திற்கு வாழ்வாதாரம் இழந்துள்ளவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்கள் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் இந்த தொழில் துறையை நம்பியுள்ளவர்கள் பெரிய அளவில் பாதிப்பு அடைந்துள்ளனர்
அரசாங்கம் மறுசுழற்சி நிலையங்களை திறப்பதற்கு உடனே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் நாட்டை தூய்மை படுத்தும் சீரிய பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்பதால் தடையை அகற்ற வேண்டும்
அட்டைப்பெட்டிகள்,காகிதங்கள், கனிம நீர் போத்தல்கள்,சுவைபான டின்கள்,பழைய இரும்பு,உலக பொருட்களை வாங்கு வதன் மூலம் நாட்டை துய்மைபடுத்தும் பெரும் கடப்பாட்டை நாங்கள் கொண்டுள்ளோம்.
நாடு அழகும் தூய்மையும் பெறுவதற்கு எங்கள் பங்களிப்பு உள்ளது.
தடை அகன்றால் நிம்மதி அடைவோம்.
இந்த நிலை நீடித்தால் எங்கள் வாழ்வாதாரம் மேலும் மோசமாக்கும் என்று கிள்ளான் தொழில் அதிபர் டத்தோஸ்ரீ மோகன்நடேசன் தெரிவித்தார்.
