
பினாங்கு மாநிலத்திற்கு சிலாங்கூர மாநில அரசாங்கம் இன்று 2 லட்சம் தடுப்பூசிகளை வழங்கியது.
பினாங்கு மக்கள் தடுப்பூசியை விரைந்து பெறுவதை உறுதி செய்வதில் சிலாங்கூர் அரசின் இந்த உதவி பெரிதும் துணை புரியும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார். 2 லட்சம் தடுப்பூசிகள் தவிர்த்து செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் மேலும் 20,000 தடுப்பூசிகள் பினாங்கு மாநிலத்திற்கு இலவசமாக வழங்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூரில் ஏற்பட்டதைப் போன்ற நோய்த்தொற்று பினாங்கிற்கும் ஏற்படக்கூடாது.
ஆகவே அம்மாநிலத்திற்கு இரண்டு லட்சம் தடுப்பூசிகளையும் இருபதாயிரம் தடுப்பூசிகளை இலவசமாகவும் வழங்கவிருக்கிறோம் என்றார் அவர்.
