
தோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டியில் மலேசியா வீரர் முகமட் ஷியாட் உலக சாதனை படைக்கும் வகையில் குண்டு எறிந்தார்.
தொழில் நுட்பத்தால் அவர் போட்டியில் தொடர்ந்து பங்கேற்க முடியாமல் போனது.
இதனால் தங்கப்பதக்கம் கை நழுவியதால் அவர் மனமுடைந்தார்.
2016 ரியோ பரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இவர் இம்முறை தங்கம் வெல்ல முடியாமல் போனதால் மலேசியர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இப்போட்டியில் முதல் சுற்றில் இவர் 17. 94 மீட்டர் தூரம் வரை குண்டு எறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய உலக சாதனை ஏற்படுத்தும் அளவுக்கு இவர் குண்டு எரிந்தபோது தொழில்நுட்ப காரணங்களினால் தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது.
