
அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி இன்னும் மருத்துவ விடுமுறையில் இருப்பதால் அவர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு விசா முறை தொடர்பில் இவர் மீது 40 ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த வழக்கு விசாரணை இன்றும் நாளையும் நடைபெறவிருந்த வேலையில் அவர் மருத்துவ விடுமுறையில் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 22ஆம் தேதி வரை வழக்கு விசாரணை நடைபெறும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
