
வரும் பொதுத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாம்.
பினாங்கு மாநில சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.
சபா,பெர்லிஸ், திரங்கானு,பேரா மாநிலங்கள் இதற்கு அனுமதி வழங்கியுள்ளன. இப்போது 6 ஆவது மாநிலமாக பினாங்கு விளங்குகிறது.
பினாங்கு சட்டமன்ற கூட்டத்தொடரில் பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் ஜீ இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
இதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 40 சட்டமன்ற உறுப்பினர்கள் முழு ஆதரவு வழங்கினர்.
