
எந்தவொரு அடிப்படை காரணமும் இல்லாமல் கோவிட் – 19 தடுப்பூசி போட்டுக் கொள்ளவதை தட்டிக் கழிக்கும் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தங்களின் பணியிலிருந்து விலகிக் கொள்ளலாம் என பிரிகேடியர் ஜெனரல் அபு ஹாசான் அஷாரி காமிஸ் கூறினார்.
இன்னும் பிடிவாதமாக இருக்க விரும்பினால் பணியிலிருந்து விலகிக் கொள்ள சொந்தமாக விண்ணப்பம் செய்யலாம்.
இந்த விவகாரத்தில் மலேசிய ராணுவப்படை எந்தவொரு அதிகாரிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் உடந்தையாக இருக்காது.
சமுதாயத்தில் ஒரு முக்கிய பணியாளர்களாக இருக்கும் நிலையில் இதுபோன்ற தடுப்பூசி திட்டத்தை புறக்கணித்தால் நம்மால் கடமையை எப்படி சரிவர செய்ய முடியும் என்றார் அவர்.
