
நான் இறந்து விட்டதாக கூறப்படுவதில் உண்மையில்லை. நான் உயிருடன் இருக்கிறேன் என்று ம இகா உதவித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் தெரிவித்தார்.
நான் இறந்து விட்டதாக பொய்யான தகவலை பரப்பியவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அரசியலில் விரோதம் இருக்கலாம். ஆனால் ஒருவர் இறந்து விட்டதாக பொய்யான தகவலை பரப்புவது வரம்பை மீறிய செயலாகும் என்றார் அவர்.
