
செமினி ஆற்றில் பகுதியில் ஏற்பட்ட தூய்மை கேட்டினால் கிள்ளான் பள்ளத்தாக்கில் 463 இடங்களில் நீர் வினியோகம் நேற்று முன்தினம் முற்றாக தடைப்பட்டது.
நீரில் துர்நாற்றம் வீசுவது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிள்ளான் பள்ளத்தாக்கின் நீர் விநியோகம் தடைப்பட்டதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
நீரில் கலந்த துர்நாற்றத்தை சுத்தப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன.
இப்போது அனைத்துப் பகுதிகளுக்கும் நீர் விநியோகம் மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பி இருப்பதாக ஆயர் சிலாங்கூர் அறிவித்துள்ளது.
