
நாட்டில் இதுவரை 65.1 விழுக்காட்டினர் அதாவது 1 கோடியே 52 லட்சத்து 41 ஆயிரத்து 655 பேர் இரண்டு தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1 கோடியே 99 லட்சத்து 32 ஆயிரத்து 137 பேர் அல்லது 85.1 விழுக்காட்டினர் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று கோவிட் தடுப்பூசி பணிக்குழு தெரிவித்துள்ளது.
இதன் வழி நாட்டில் மொத்தம் 3 கோடியே 51 லட்சத்து 50 ஆயிரத்து 474 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
