
புத்ரா ஜெயா பிரசிண்ட் 2இல் பாசார் தானியில் திருநாவுக்கரசு சாந்தி தம்பதியர் பால் அப்பம், வடை, தோசை போன்ற இந்திய பலகாரங்களை விற்பனை செய்து வருகிறார்கள்.
இதில் மலாய்க்காரர்கள் பால் அப்பத்தை அதிகம் வாங்கிச் செல்கிறார்கள்.
இந்தப் பால் அப்பத்தை விரும்பி வாங்குபவர்களில் நிதியமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஷப்ருலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு – சாந்தி தம்பதியர் விற்பனை செய்யும் பால் அப்பம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று நிதி அமைச்சர் பதிவேற்றம் செய்துள்ளார்.
மேலும் இங்குள்ள கடைக்காரர்களுக்கு அவர் தேசியக் கொடியும் வழங்கியுள்ளார்.
