
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பு உள்ள நீச்சல் குளத்தின் அருகே தாக்கப்பட்ட பாதுகாவலர் எஸ். தேவசகாயம்
64 வயது) இவ்வாண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி காலமானார்.
இன்று அவரின் இல்லத்திற்கு வருகை புரிந்த மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் காலஞ்சென்ற எஸ். தேவசகாயம் அவரின் மனைவிக்கு ஆறுதல் கூரி சொக்சோ (SOCSO) இலாக்க மூலமாக மரண சகாய நிதி, மருத்துவ செலவு மற்றும் கணவரின் மாதாந்திர ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்படும் என்று கூரினார்.
இந்நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள், சொக்சோ அதிகாரிகள், மாநில ம.இ.கா தலைவர் டத்தோ வ. இளங்கோ செயலாளர் திரு. எஸ். சண்முகவேலு உட்ப்பட ம.இ.கா பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.
