
பாதுகாவலர் தேவசகாயத்தை தாக்கிய ஆடவரை மீண்டும் கைது செய்ய முடியுமென்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் தெரிவித்தார்.
தேவசகாயத்தை தாக்கி யவர் மீது ஜனவரி 6ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
அவர் மீதான வழக்கு விசாரணை இன்னும் நடைபெறவில்லை.
இந்நிலையில் கடுமையாக தாக்கப்பட்ட பாதுகாவலர் தேவசகாயம் பல மாதங்கள் கழித்து சிகிச்சை பலனின்றி இப்போது மரணமடைந்திருக்கிறார்.
கடுமையாகத் தாக்கப்பட்டவர் இப்போது மரணம் அடைந்து இருப்பதால் இவரை தாக்கிய நபரை மீண்டும் கைது செய்ய முடியும்.
மேலும் வரும் 9ஆம் தேதி அவர் மீதான விசாரணை தொடங்கும்போது அவர் மீதான குற்றச்சாட்டை கொலை குற்றச்சாட்டாக மாற்றும்படி சட்டத்துறை தலைவரை குலசேகரன் கேட்டுக் கொண்டார்.
