
அம்னோ கட்சி சார்பில் சபாநாயகர் பதவிக்கு டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் துணை சபாநாயகராக இருந்தார்.
இப்போது அந்தப் பதவியை இவர் ராஜினாமா செய்துள்ளார்.
வரும் 13ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் மீண்டும் தொடங்குகிறது.
அப்போது சபாநாயகர் பதவிக்கு டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மான் பெயரை அம்னோ பரிந்துரை செய்ய முடிவு செய்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவித்தது.
