
அமைச்சர் அந்தஸ்தில்
பொருளாதார மீட்சி நடவடிக்கை குழு தலைவராக டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் நியமனம் செய்யப்பட்டிருப்பது குறித்து கெஅடிலான் கட்சி கேள்வியை எழுப்பியுள்ளது
செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த நியமனம் தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அந்தஸ்தில் இந்த நியமனம் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது தலைமையிலான அமைச்சரவையை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நம்பவில்லையா என்று கெஅடிலான் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ நசுத்தியோன் கேள்வி எழுப்பினார்.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பிரதமராக இருந்த காலத்தில் நாட்டில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தவில்லை.
அப்படி இருக்கையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மலேசியாவை எப்படி மிட்சி திட்டத்தின்கீழ் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தப் போகிறார் என்று டத்தோஸ்ரீ நசுத்தியோன் கேள்வி எழுப்பினார்.
