
நாட்டில் நோய்த்தொற்றால் நேற்று ஒரே நாளில் 336 பேர் மரணம் அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நாட்டில் இந்த கொடிய நோய்க்கு 18.219 பேர் பலியாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். தற்போது சிலாங்கூர், ஜொகூர், பினாங்கு கெடா, பேராக் கிளாந்தான், சபா ஆகிய மாநிலங்களில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக அவர் சொன்னார்.
