
டிங்கில் கம்போங் அம்பர் தினாங்கில் அடிக்கடி ஏற்படும் வெள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சிலாங்கூர் மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் களம் இறங்கியுள்ளார்.

கடந்த இரு மாதங்களாக பெய்த அடை மழையால் ஐந்து முறை ஏறிய வெள்ளத்தால் 250 குடும்பங்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. வெள்ளம் எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து அதற்கு நிரந்தர தீர்வு காண டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிப்பாங் நகராண்மைக் கழகம் , கவுன்சிலர் மற்றும் கிராம தலைவர் கள் உதவியோடு இந்த வெள்ளப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
