
மலேசியா சிறுபான்மை செயல் கட்சி என்றழைக்கப்படும் மீரா கட்சியில் கோத்தா ராஜாவை சேர்ந்த லெட்சுமணன் இணைந்தார். பாஸ் கட்சியின் இந்தியர் பேரவை அமைப்பு தலைவராகவும் சிலாங்கூர் மாநில பாஸ் இந்தியர் பேரவையின் தலைவராகவும் இருந்த அவர் பின்னர் அமானாவில் இணைந்து முகமட் சாபு வுடன் பணியாற்றினார். இப்போது மீரா கட்சிக்கு நாடாறிந்த அரசியல் பிரமுகர் கே.பி. சாமி தலைவராக பொறுப்பேற்றதால் இந்த கட்சியில் சேர்ந்து இருப்பதாக லட்சுமணன் தெரிவித்தார். கோத்தா கெமுனிங் மீரா கட்சியின் பொறுப்பாளர் டாக்டர் பாலாவிடம் மீரா கட்சியில் இணையும் உறுப்பினர் பாரத்தை லெட்சுமணன் ஒப்படைத்துள்ளார்.



