
ஐபிஎப் கட்சியையும் தொண்டர்களையும் தூற்றி பேசுபவர்களைக் கண்டு அஞ்ச வேண்டாம் என்று கட்சியின் தலைமை செயலாளர் மோகன் கேட்டுக் கொண்டார். ஐ.பி.எப் கட்சியின் கிளை கூட்டங்கள் மற்றும் தொகுதி கூட்டங்கள் கடந்த 21/4/2021 முதல் நாடு முழுவதும் சிறப்பாக நடந்து கொண்டு வருகின்றன. ஆனால், கோவிட்-19 தாக்கத்தின் அதிகரிப்பால் அரசாங்கம் அறிவித்துள்ள நடமாட்டு கட்டுப்பாட்டு ஆணை ஏற்ப இன்றளவும் நடைப்பெறாத கிளை மற்றும் தொகுதி கூட்டங்களை அடுத்த அறிவிப்பு வரை ஒத்தி வைக்குமாறு தேசிய பொது செயலாளர் மோகன் கேட்டுக் கொண்டார்.
இந்த காலக்கட்டத்தில் அனைவரும் நடமாட்ட கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி அரசாங்கத்தின் முடிவுகளுக்கு ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். அதே சமயம் கட்சியின் மீது பொறமை கொண்டு கட்சியையும் தொண்டர்களையும் தூற்றி பேசுபவர்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். கட்சி சரியான முறையில்தான் செல்கின்றது. கட்சி.
