
நாட்டில் உள்ள உலக பொருள் மறுசுழற்சி கடைகள் மீண்டும் தங்களது வியாபாரத்தைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலோகப் பொருள்கள் சார்ந்த வணிகர்கள் இனிமேல் தங்கள் வணிகத்தைத் தொடங்கலாம் என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு மன்றம் இதற்கான அனுமதியை வழங்கியதாக அவர் தெரிவித்தார். நாட்டில் கட்டங்கட்டமாக பல தொழில்துறைகள் திறக்கப்பட்ட நிலையில், மறுசுழற்சி உலோகப் பொருள்கள் சார்ந்த வணிகர்கள் தங்கள் தொழிலைத் தொடர முடியாத சூழல் இருந்து வந்தது. அதற்கான அனுமதியைப் பெற தொடர்ச்சியாக நடந்த முயற்சியில் இன்று அதற்கான அனுமதி கிடைத்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
