
நோய்த் தொற்றினால் நாட்டில் உள்ள டாக்ஸி ஓட்டுனர்கள தங்களது வருமானத்தை இழந்து பரிதவிப்பதாக மலேசிய மக்கள் கம்யூனிகேஷன் டாக்ஸி ஓட்டுனர் சங்க தலைவர் முத்து தெரிவித்தார். இப்போது தினமும் டாக்ஸி ஓட்டுனர்கள் பெரும் சிக்கலை எதிர் நோக்கி வருகிறார்கள். அரசாங்கத்தின் ஆணைக்கு ஏற்ப ஒரு நபரை மட்டுமே டாக்ஸியில் ஏற்ற முடியும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரை ஏற்றினால் வருமானம் கிடைக்கும்.ஆனால் இதற்கு அனுமதி இல்லை என்று அவர் சொன்னார். இரண்டு பயணிகள் பயணம் செய்ய அரசு அனுமதி அளித்து சிக்கல் தீர்க்க வேண்டும் ஒரு நாளைக்கு குறைந்தது 20 வெள்ளி சம்பாதிக்க முடியவில்லை என்று அவர் வேதனையோடு குறிப்பிட்டார்.
