
நாட்டில் 3ஆம் மற்றும் 4ஆம் மீட்சி திட்டத்தில் உள்ள மாநில பள்ளிகள் அக்டோபர் 3ஆம் தேதி திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ரஸ்டி ஜிடின் தெரிவித்தார். அதேசமயம் 1ஆம் மற்றும் 2ஆம் மீட்சி திட்டத்தில் உள்ள பள்ளிகள் திறக்க அனுமதி இல்லை என்று அவர் தெரிவித்தார்.. பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்கள் எண்ணிக்கை 50 விழுக்காடாக கட்டுப்படுத்தப்படும். தேசிய பாதுகாப்பு மன்றத்தின் Sop விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் இயங்கும். மாணவர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாணவர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். முதல் வாரத்தில் முதல் மாணவர்கள் கேளு பள்ளிக்கு திரும்பும். இரண்டாம் மாணவர்கள் குழு வீட்டிலேயே கற்றல் கற்பித்தலை மேற்கொள்வார்கள். மறுவாரம் இரண்டு மாணவர்கள் குழு பள்ளிக்கு திரும்பும் அப்போது முதல் மாணவர் குழு வீட்டிலேயே கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் என்று அவர் சொன்னார்.



