
போதைப் பொருள் விநியோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெனடிக் தனிலாஸ் கடந்த 2017 ஆம் ஆண்டில் ஜூலை 10ஆம் தேதி போலீஸ் நிலையத்தில் மரணமுற்றார். இவரின் மரணம் தொடர்பில் குடும்பத்தார் அரசாங்கத்தின் மீது சிவில் வழக்கு தொடுத்தனர். தடுப்பு காவலில் மரணமடைந்த பெனடிக் குடும்பத்திற்கு 2 லட்சத்து 81 ஆயிரம் வெள்ளி இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
