
அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வது தொடர்பில் நடத்தப்பட்ட சந்திப்பில் வாரிசான் அழைக்கப்படவில்லை. அரசாங்கம் மற்றும் பக்கத்தான் ஹரப்பான் இடையே பேச்சுவார்த்தை முடிந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நேரத்தில் வாரிசானுக்கு அழைப்பு விடுப்பது எந்த வகையில் நியாயம் என்று வாரிசான் இளைஞர் பிரிவு தலைவர் முகமட் அஜிஸ் கேள்வியை எழுப்பினார். நாடாளுமன்ற எதிர்க்கட்சி வரிசையில் 105 எம்பிக்கள் ஒன்றாக இடம் பெற்றிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஏன் அழைப்பு விடுக்கவில்லை என்றார் அவர். பக்கத்ததான் ஹரப்பான் சொல்வதைக் கேட்க நாங்கள் ஒன்றும் தலையாட்டிகள் அல்ல. மேலும் வாரிசான் கட்சி தலைவரும் ரப்பர் ஸ்டெம் அல்ல என்று அவர் சாடினார்.
