27.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

பத்து கேவ்ஸ் ரிசர்வ் நிலத்திற்கு பக்கத்தான் நிலப்பட்டா வழங்கவில்லை 242,326 ஏக்கர் நிலம் பாதுகாக்கப்படுகிறது

பத்து கேவ்ஸ் ரிசர்வ் நிலத்திற்கு நிலப்பட்டா வழங்க பக்கத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஒரு போதும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரியின் அரசியல் செயலாளர் ஜூவாரியா தெரிவித்தார். அந்த ரிசர்வ் நிலப்பகுதி தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் மூன்று முறை நிலத்தகுதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 26-8-1954இல் 28.719 ஏக்கர் நிலம் தகுதி மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 30-4-1959இல் 17.45 ஏக்கர் பகுதி தகுதி மாற்றத்திற்குள்ளானது. மூன்றாவது முறையாக கடந்த 3-1-2008இல் மேலும் 29.78 ஏக்கர் நிலம் தகுதி மாற்றம் செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்தார். தற்போது பத்து கேவ்ஸ் ரிசர்வ் நிலத்தின் 242,326 ஏக்கர் தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக நிலைநிறுத்தப்பட்டு வருவதாக புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினருமான அவர் சுட்டிக்காட்டினார். பத்து கேவ்ஸ் ரிசர்வ் நிலத்திற்கு தனி நிலப்பட்டாக்கள் வழங்கப்பட்டதாக கூறி இணையதள ஏடு இம்மாதம் 10 ஆம் தேதி வெளியிட்ட செய்திக்கு விளக்கமளிக்கும் விதமாக ஜூவாரியா இந்த அறிக்கையை வெளியிட்டார். சுமார் 329.75 ஏக்கரை உள்ளடக்கிய பத்து கேவ்ஸ் ரிசர்வ் பகுதி பொதுமக்களின் பொழுது போக்கு நடவடிக்கைகளுக்கான நிலமாக கடத்ந 1930ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி ஆர்ஜிதம் செய்யப்பட்டது. தனிப்பட்ட நிலப்பட்டாக்களை வழங்குவதன் மூலம் அந்த பத்து கேவ்ஸ் ரிசர்வ் நிலத்திற்கான தகுதியை மாற்றுவதற்கு கடந்த 2008மார்ச் 13 ஆம் தேதி ஆட்சிக்கு வந்த பக்கத்தான் ராக்யாட் கூட்டணியும் அதன் பின்னர் பதவியேற்ற பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியும் ஒரு போதும் அனுமதி வழங்கவில்லை என்று ஜூவாரியா சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles